சென்னை பிப்-12. தமிழ்நாட்டில் இந்து அறநிலையத் துறைக்கு
சொந்தமாக உள்ள ஐந்து லட்சம் ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த
நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநில இந்து சமய அறநிலையத்
துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.
நேற்று ஈரோடு மாவட்டம் சென்னிமலை சுப்பிரமணியம் சுவாமி
திருக்கோவிலில் இரண்டாம் கட்ட திருப்பணிகளை தொடக்கி வைத்து
அவர் உரையாற்றினார். கோவை மற்றும் மதுரை மண்டல அளவில்
நிலங்களை கையகப்படுத்த சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர்கள்
இன்னும் இரண்டு நாட்களில் நியமிக்கப்படுவார்கள் என்றார்.
Feb 12, 2008
* Do not use semicolon(;)